Vinayagar

Vinayagar

Saturday, December 11, 2010

அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்

                                            புட்லூர் அங்காளபரமேஸ்வரி
                                உற்சவர் புட்லூர் அங்காளபரமேஸ்வரி
                                                        புற்று
                                                     விநாயகர்
  கோயில் மண்டபம்
                                                     மாரியம்மன்
நவக்கிரங்கள்
                                                          தெப்பகுளம்

மூலவர்: புட்லூர் அங்காளபரமேஸ்வரி


இங்கு அம்மன் பிள்ளைதாச்சி வடிவத்தில் கால்களை நீட்டி படுத்த வண்ணம் காட்சியளிக்கிறாள். இங்கு பெண்கள் அதிகமாக வருகிறார்கள். அதனால் குழந்தை இல்லாதவர்கள் இங்கு அதிகமாக வந்து வேண்டிக் கொள்கின்றனர். அம்மனின் பாதத்தில் எலுமிச்சம்பழம் வைத்து, பெண்கள் தங்கள் புடவை முந்தானையை பாதத்தின் அருகே பிடித்து வேண்டுகின்றனர். எலுமிச்சம்பழம் பாதத்தில் இருந்து உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் நினைத்தது நடப்பதாக நம்பப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை இருப்பவர்கள், வீட்டில் பிரச்னை இருப்பவர்கள் புடவை முந்தானையிலிருந்து சிறிது கிழித்து கோயில் வெளியே மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விடுகிறார்கள்.

பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாக தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தான். அதே நிலத்திலேயே வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.

மகிசுரன் அசுர குணம் கொண்டவன். ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானம் வாங்கி கொண்டு, வட்டி மேல் வட்டி போட்டு சொத்தை அபகரித்து வந்தான். பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான். ஊரார் முன்னிலையில்,""நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி ஒரு நாள் இரவில் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி பொழுது விடிவதற்குள் முடிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் தொலைத்து விடுவேன்,''என எச்சரித்து சென்றான். பூங்காவனம் என்பது தீய சக்திகள் உலவும் இடம். தினம் தினம் அடிவாங்கி சாவதை விட, ஒரே நாளில் செத்து விடலாம்.

என தீர்மானித்த பொன்மேனி சிவராத்திரி இரவில் பூங்காவனத்தை அடைந்தான். அங்கு தன் இஷ்ட தெய்வமான கருமாரியை வணங்கி நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது ஒரு முதியவரும், மூதாட்டியும் இங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். பாட்டிக்கு தாகத்தில் தவித்தாள். உழுது கொண்டிருந்த பொன்மேனி இதைக் கண்டு பரிதாபப்பட்டு, பெரியவரை அழைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வர சென்றான்.

திரும்பி வந்து பார்த்த போது மூதாட்டியைக் காணவில்லை. அவன் அதிர்ச்சியுடன் முதியவரின் பக்கம் திரும்பிய போது அவரும் அங்கு இல்லை. பின்னர் மீண்டும் உழுதான் பொன்மேனி. அப்போது கலப்பை எதன் மீதோ பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட பொன்மேனி மயங்கி விட்டான். அப்போது ஒரு அசரீரி,""பயப்படாதே. நான் அங்காள பரமேஸ்வரி. சிவனுடன் முதியவள் வடிவத்தில் வந்த நான், மண்புற்றாக மாறிவிட்டேன்.

ஏர் முனை என்னை குத்தியதால் ரத்தம் பீறிட்டது. வறுமையில் வாடிய நீ என்னை வேண்டியதால் ஈசனுடன் இங்கு வந்தேன். என்னை உழுது, நான் இங்கு இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய நீ, இனிமேல் எப்போதும் என்னையும் சிவனையும் பூஜிக்கும் பேறு பெற்றாய்,'' என கூறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த மண்ணெல்லாம் விலகி, புற்று தெரிந்தது. அதில் அம்மன் மல்லாந்து படுத்த நிலையில் இருந்தாள். பூங்காவனத்தில் தோன்றியவள் என்பதால் "பூங்காவனத்தம்மன்" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவில்..........

                                மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்
                                         மலைக்கோயில் தோற்றம்
                                    மலைக்கோயில் நுழைவுவாயில்
                                             மூலவர் உச்சி பிள்ளையார்
                                              உச்சி பிள்ளையார்
                                       கோவிலுக்கு செல்லும் வழி


மூலவர்:  உச்சிப்பிள்ளையார் 

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள்  கண்டு களிக்கின்றனர்.

மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.
தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.....

                                             மீனாட்சி - சுந்தரேசுவரர்
                                                   கோயில் கோபுரம்
                                                               பொற்றாமரைக் குளம்
                                                                 கோவில் பிரகாரம்
 
                                                     இரவில் கோயில் கோபுரம்


 
                                                      தேரோட்டம்



சிவபெருமான் பெயர்: சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
அம்மன்:  மீனாட்சி

தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்கான கோவில்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புடைய ஒன்றாகும். இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. 

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. 

 சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.



Tuesday, November 30, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்

தட்சிணாமூர்த்தி கோயில் நுழைவாயில்

 கோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம்

கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்
 கோயில் ராஜகோபுரம்

கோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண்

 சுப்பிரமணியர் கருவறைக்கு செல்லும் பாதை 

தஞ்சை பெரிய கோயிலின் நுழைவாயில்

காளை முக சிவன்

கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் ஆனது  இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும்.இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு காலத்தில் இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காரணத்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோவில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.  இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது முடிவடைந்துள்ளது.

இக்கோயிலின் கட்டிடக்கலை சோழர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.

 தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்புற நடைப்பெற்றது.
மத்திய மந்திரி ஆ.ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

Thursday, November 25, 2010

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

                                                    அம்மன் கமலாம்பிகை

                                             மூலவர் வன்மீகநாதர்

                                             நேர் கோட்டில் நவக்கிரகங்கள்


                                                       நிற்கும் நந்தி

                                               பெருமாள் மார்பில் சிவன்

                                                        கமலாலய தீர்த்தம்

                                                         தியாகராஜ சுவாமி

                                                         திருவாரூர் பெரிய தேர்

                                                      வாதாபி கணபதி


மூலவர்: தியாகராஜர் 
அம்மன்: கமலாம்பிகை


திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இக்கோவில் மிகவும் பழமையானதாகும். தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா' என்று பொருள்.

 திருவாரூர் என்றாலே தேர் தான் நினைவிற்கு வரும். இத்தேர் தமிழகத்திலுள்ள தேர்களிலேயே மிகப் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும்.  இதனால் "திருவாரூர் தேரழகு" என்று எல்லோராலும் போற்றப்படுகிறது.
மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம்
நடைபெறுகிறது .இத்தேரோட்டத்தை காண கண் கோடி வேண்டும்.  இத்தேரோட்டத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். 


பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை
பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

இதை "நித்திய     பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே,   இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின்     அருளையும் பெற்ற புண்ணியம்  கிடைக்கும்.

மூலவர் வன்மீகிநாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். 


 

Tuesday, November 16, 2010

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்

                                                    மூலவர் வெள்ளிமலை நாதர்

                                                    அம்மன் பெரிய நாயகி

                                                    முருகன்

                                                    மகா மண்டபம்


                                                    அம்மன் சன்னதி
                                                      

                                                          கோயில் பிரகாரம்

                                                     மூலவர் சன்னதி
  


மூலவர்:  வெள்ளிமலை நாதர்
 அம்மன்: பெரிய நாயகி
                                            

பொது தகவல்:

இது ஒரு சிறிய கோயில். 24 வருடங்களுக்கு பிறகு (ஜூன் 2010) இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.  இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும்.
ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது.
ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர்.
பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார்.
பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.


சிறப்பு பூஜைகள்:. 




கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், மற்றும் மார்கழி மாதம் முழுவதும் பூஜைகள் செய்யப்படும். மார்கழி மாதத்தில் சூரிய உதயத்தின் பொழுது வெளிச்சம் சிவனின் மேல் விழுவது தனிச் சிறப்பாகும். திருவாதிரை அன்று சொக்கபானை கொளுத்துவது இன்றும் நடைபெற்று வருகிறது.