Vinayagar

Vinayagar

Tuesday, November 30, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்

தட்சிணாமூர்த்தி கோயில் நுழைவாயில்

 கோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம்

கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்
 கோயில் ராஜகோபுரம்

கோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண்

 சுப்பிரமணியர் கருவறைக்கு செல்லும் பாதை 

தஞ்சை பெரிய கோயிலின் நுழைவாயில்

காளை முக சிவன்

கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் ஆனது  இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும்.இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு காலத்தில் இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காரணத்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோவில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.  இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது முடிவடைந்துள்ளது.

இக்கோயிலின் கட்டிடக்கலை சோழர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.

 தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்புற நடைப்பெற்றது.
மத்திய மந்திரி ஆ.ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment